2019- 2020 ஆண்டிற்கான முக்கிய நிகழ்வுகள்

1. வைகாசி விசாகம்- முருகன் வள்ளி தேவசேனா திருக்கல்யாணம்-பின் திருவீதியுலா-19-05-2019

2. வைகாசி மாதம் -திருஞானசம்பந்தர் குருபூஜை - 21-05-2019 காலை சிவனுக்கும் அடியார்க்கும் அபிஷேகம்,அர்ச்சனை மாலை தேவாரப்பாடல்கள் - பாடுவது பள்ளி சிறார்கள் மற்றும் திருப்புகழ் பாடல்கள்- பாடுவது தன்மீசர் பாடசாலை மாணாக்கர்.

3.மஹாருத்ரம் : 09-06-2019
காலை 6.45க்கு விக்நேச்வர பூஜையுடன் தொடங்கி கலச ஸ்தாபனம்,மஹாந்யாஸம், ருத்ர ஜபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது. சிவனுக்கு அபிஷேகம் அர்ச்சனை மஹாதீபாராதனையுடன் சுமார் 1 மணிக்கு நிறைவுற்றது. சுமார் 140 ரித்விக்குகள் ருத்ர ஜபத்தில் பங்கேற்றனர். ஏறக்குறைய 100 உபயதாரர்கள் காணிக்கை செலுத்தி இந்த வைபவத்தில் பங்கு பெற்றனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.